மிஸ் பண்ணிடாதீங்க..! கோடையில் கோலாகலமாக தொடங்கிய 61வது மலர் கண்காட்சி..!

Published by
அகில் R

சென்னை :  கொடைக்கானலில் 61-வது கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது.

மலைகளின் இளவரசி என்று பெருமைக்குரிய இடம் தான் கொடைக்கானல், தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே அந்த வெப்பத்தை தாக்கத்தை தனிப்பதற்கு கொடைக்கானல், ஊட்டி என்று சென்று வருவோம். அதிலும் கொடைக்கானலில், கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் இந்த மே மாதம் கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் தொடங்கிவிடும்.

தற்போது, இந்த ஆண்டும் இன்றைய நாளில் மலர் கண்காட்சிகளுடன் கோடை திருவிழாவானது கோலாகலமாக தொடங்கியுள்ளது. மேலும், இந்த ஆண்டு தொடங்கியுள்ள 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது இன்று காலை 8 மணி அளவில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கோடை திருவிழாவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

இன்று தொடங்கிய இந்த மலர் கண்காட்சியில் கலந்து கொண்ட சுற்றுலா பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசகன் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அவருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இவர்களுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். இன்று தொடங்கியுள்ள மலர் கண்காட்சியானது தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், இந்த கோடை விழாவானது வருகிற மே-2 ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், இந்த பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்க்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்குபிறகு கோடைவிழா நடைபெறுவதால் கொடைக்கானல் நகரமே விழாக்கோலம் போல காட்சியளித்து வருகிறது. அதே போல கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா சாடல்!

சென்னை : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா (வி.கே.சசிகலா) நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…

15 minutes ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

43 minutes ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

1 hour ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

1 hour ago

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

12 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

13 hours ago