சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சியின் தலைவர் பதவியை தன் வசம்படுத்தியது அதிமுக.
அதிமுக வெற்றி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. சேலம் அருகே நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
அதன்படி, நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் மாணிக்கம், வனவாசி பேரூராட்சியின் தலைவர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அதிமுக வேட்பாளர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திமுக வெற்றி:
இதுபோன்று, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட சிபிஎம் வேட்பாளர் கீதாவிற்கு வழிமொழிய, முன்மொழிய யாரும் வராததால் போட்டி வேட்பாளர் திமுகவை சேர்ந்த பாண்டியம்மாள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு:
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும், கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…