இரட்டை ஆண்டு ஆயுள் தண்டனை… இரட்டை கொலை வழக்கு..!

Published by
பால முருகன்

இரட்டை கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் .

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் கூலித்தொழி செய்துவந்தார், இவருடைய மகன்கள் சதீஸ்குமார் மற்றும் வினோத்குமார் சதீஸ் குமார் இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி சதீஸ்குமார் மற்றும் வினோத்குமாரை 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மற்றும் அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டேவிட், தேவராஜ் , சதீஷ் , பாலமுருகன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது தெரியவந்தது, கொலை நடப்பதற்கு முன் தினம் சதீஸ்குமார் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது லட்சுமணன் வண்டியை நிறுத்தி என் வேகமாக செல்கிறாய் என்று கேட்டு வாக்குவாதம் நடத்தியுள்ளார், அதற்கு பிறகு அணைத்து மக்கள் மற்றும் பெண்கள் முன்பாக தாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சதீஸ்குமார் தனது அண்ணன் வினோத்குமாருடன் சேர்ந்து லட்சுமணனை கொலை செய்துவிடுவார் என்ற அச்சத்தில் லட்சுமணன் 10 பேர் கொண்ட மர்ம கும்பலுடன் சேர்ந்து வினோத்குமார் மற்றும் சதீஸ்குமாரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கு கடலூர் வட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லட்சுமணன், டேவிட்ராஜ், சதீஷ், பாலமுருகன் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்கள் , இதற்கு பின்னர் இவர்களுக்கு நீதிமன்றம், பிடிவாரண்ட் கொடுத்தது .இந்நிலையில் லட்சுமணன் வேப்பூர் கோழிச் சந்தையில் பதுங்கிருந்தார், இதனை தொடர்ந்து மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் காவல்துறையினர்  பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்று முடிவடைந்து மேலும் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார்.மேலும் கொலைகளை முன்னின்று நடத்திய லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

50 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago