நாகையில் உள்ள தெத்தி பகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் மேலே பறந்த ட்ரோன் பறந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகையில் உள்ள தெத்தி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 சட்டமன்றத் தொகுதிகளாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ராணுவ போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை பத்து நிமிடத்திற்கு மேலாக அந்த தனியார் கல்லூரி மேலே ட்ரோன் பறந்துள்ளது.
ட்ரோனை பறக்கவிட்ட மூன்று பேரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ட்ரோன் கேமரா மற்றும் கேமரா பதிவு செய்த காட்சிகளை வைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுகவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…