விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்தை தெரிவித்த டிடிவி தினகரன்.!

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பலர் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரான டிடிவி தினகரன் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, வினைகளை தீர்த்து வெற்றிகளை தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று, உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும், மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். அதற்கு முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2020
கொரோனா பேரிடரால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் விரைவில் அகன்று,உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும்,மகிழ்ச்சியான வாழ்வும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகட்டும். உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்.அதற்கு முழு முதற்கடவுளான விநாயகரின் அருள் துணை நிற்கட்டும் என்று வேண்டுகிறேன். pic.twitter.com/QCTVg8bBX0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025