தமிழ்நாடு

“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” – அதிமுக மீது துரைமுருகன் விமர்சனம்..!

Published by
murugan

ஆளுநர் அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநரின் செயல்பாடு, பல்கலை.துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றி விட்டதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், மீன்வளப் பல்கலைக்கழகம் அதே பெயரிலே நீடிக்கிறது. உண்மைக்கு மாறான செய்தியை அதிமுக கூறி விட்டு வெளிநடப்பு செய்துள்ளது.

அதிமுக வெளிநடப்பு செய்ததற்கான உண்மையான நோக்கம் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை மாற்றியதாக கூறியது அல்ல, ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என அதிமுக நினைக்கிறது. பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என்பதால் இல்லாத ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். கிராமத்து பழமொழி போல் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என அதிமுக மீது துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே சென்று விட்டாலும் அதிமுகவில் உள்நீரோட்டம் இருக்கிறது. ஆளுநரை எதிர்த்தால், மோடியை எதிர்த்தது போல என்பதை, அதிமுகவின் இன்றைய வெளிநடப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜெயலலிதா பெயரில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படவில்லை என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago