திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அடைக்கப்பட்டிருந்த புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இன்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஏரியிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அதன்பின் 1500 கன அடி வரை உயர்த்தப்பட்டு இருந்தது.
அதன்பின் நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலை கனமழை காரணமாக மீண்டும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 312 கன அடியாக உள்ள நிலையில், 177 கன அடி நீர் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டு கொண்டிருக்கிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…