லெபனான் தலைநகர் பைரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் கிடங்கில் இருந்த 2,750 டன் அளவு அமோனியம் நைட்ரேட்டால் விபத்து ஏற்பட்டதாகவும், இந்த வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 4000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதா..?என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சுங்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அமோனியம் நைட்ரேட் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆறு ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மணலி சுங்கத்துறை கிடங்கைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லை என சென்னை சுங்கத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
விவசாயத்திற்கு உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவும் அமோனியம் நைட்ரேட் அதிக அளவில் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…