லெபனான் தலைநகர் பைரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் கிடங்கில் இருந்த 2,750 டன் அளவு அமோனியம் நைட்ரேட்டால் விபத்து ஏற்பட்டதாகவும், இந்த வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 4000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதா..?என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சுங்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அமோனியம் நைட்ரேட் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆறு ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மணலி சுங்கத்துறை கிடங்கைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லை என சென்னை சுங்கத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
விவசாயத்திற்கு உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவும் அமோனியம் நைட்ரேட் அதிக அளவில் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…