அதிமுக – பாஜக கூட்டணி முறிவு… முதல் முறையாக விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

ED Raid: அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது.

Read More – அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?

இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தது. ஆனால், இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

அதன்படி, மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டிருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில், அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வருவதாக கூறப்படுகிறது.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்டுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டவிரோதமாக பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே, இதுவரை வராத அமலாக்கத்துறை பாஜவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

4 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

4 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

4 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

5 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

6 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

7 hours ago