புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா… பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!

Published by
Muthu Kumar

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்க அதன்  திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் புனிதமான செங்கோல், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படுகிறது.

குடியரசுத்தலைவர் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் திறப்புவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக இந்த திறப்பு விழாவில் பங்கேற்கிறது.

இந்த புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், சுதந்திரம் அடைந்த 75 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் மக்களாட்சியின் அடையாளமாக, புதிய பாராளுமன்ற கட்டிடம் இருக்கிறது.

மேலும் தங்கத்தால் ஆன செங்கோல் பாராளுமன்றத்தில் இடம்பெறுவது தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் நம் பாரம்பரியத்திற்கு உள்ள பெருமை. தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago