[Image Source : PTI]
சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுவில் குற்றசாட்டியுள்ளார். வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மே 4ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவை போலீசார் கடைபிடிக்கவில்லை என அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 7க்குள் பதிலளிக்க குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக மிலானி என்பவர் அளித்த புகாரை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, 2021 தேர்தலில் சொத்து விவரத்தை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…