AMMK general secretary TTV Dhinakaran [File Image]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். ஒருவேளை கூட்டணியில் அமமுக இருக்க முடியாது என்ற சூழ்நிலை வந்தால் தேர்தலில் தனித்து நிற்கவும் தயார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் அமமுக இருக்கலாம். எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார். அதிமுக மீண்டும் ஓன்றிணைய வாய்ப்புகள் இல்லை. அதிமுக ஒன்றிணையும் என சசிகலா சொல்லி இருப்பதால் அவரிடம்தான் இதை கேட்க வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் பழனிசாமி்யுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றார். மேலும், ஐனவரி மாதம் ஓ.பி்எஸ் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து யோசிப்போம். அமமுக, ஒபிஎஸ் இடையேயான நட்பு, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக உள்ளது.
அதிமுக – பா.ஜ.க கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர், இப்போது பிரிந்து இருக்கின்றனர். அப்படித்தான் பார்க்க முடியும். தேர்தலுக்கான எங்களது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்போம். அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வரை ஓயமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…