தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்தவர் எம்ஜிஆர்.! பசும்பொன்னில் இபிஎஸ் பேட்டி.!

Published by
மணிகண்டன்

இன்று அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டும் இந்த நிகழ்வு , முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலலே அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வந்து நேரடியாக மரியாதை செலுத்திய பின்னர், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் வந்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன்: தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பார்த்தவர் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை பேட்டி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தனது வாழ்நாள் முழுவதும் தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக மதித்து செயல்பட்ட தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர். ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என இரு தேர்தலிலும் வெற்றி பெரும் அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவர்.

தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக அறிவித்தவர் அப்போதைய  தமிழக முதல்வர் எம்ஜிஆர். தேவர் புகைப்படத்தை சட்டமன்றத்தில் அதிமுக தான் திறந்து வைத்தது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த சமயத்தில், 13.5 கிலோ தங்கம் கவசத்தை அளித்தார். நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் முழு உருவ சிலையானது அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.

அவர் தேசத்திற்காக வாழ்ந்த மாபெரும் தலைவர். அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக மேற்குறிப்பிட்ட திட்டங்களை அதிமுக செயல்படுத்தியது. அவர் பிறந்த இந்த ஊர் தெய்வீக பூமி. பசும்பொன்னில் தேவர் நினைவாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. தெய்வீக திருமகனாரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தியுள்ளோம். இந்த பொன்னான நாளில் இங்கே அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என கூறிவிட்டு சென்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago