திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒடுக்கத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின் அவர், காரில் திண்டுக்கல் சென்றார். அப்போது மாவட்ட எல்லையான பள்ளபட்டி சிப்காட் அருகே அவரை அமைச்சர் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் மருத ராஜ், சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, நிலக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் யாகப்பன்ஆகியோர் வரவேற்றனர். பின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், தமிழக அரசு இந்தியாவிலேயே கல்வி, மருத்துவத் துறையில் நலத்திட்டங்களை, வேறு எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு செய்துள்ளது. இதனால் கல்வியில் தமிழகம் விரைந்து வளர்ச்சி பெற்று வருகிறது. மாண்புமிகு ஜெயலலிதா காலத்தில் செய்த அனைத்து நலத்திட்டங்களும் தங்குதடையின்றி மக்களுக்கு சென்று சேர்கிறது. அதனால் தமிழக அரசு எப்போதும் மக்களின் அரசாக இருக்கும், என்றார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…