குளறுபடியானால் கடும் நடவடிக்கை..தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் குட்டு.!

Published by
kavitha

10-ஆம் வகுப்பு  மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக  10-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மேலும் 11-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த  பொதுத்தேர்வும் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது.

அதன்படியாக 80% அவர்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையிலும் மீதமுள்ள 20% மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்படும் எனவும் தெரிவித்தது.இந்த நிலையில் தற்போது தேர்வுத்துறையானது இது குறித்து ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி அடையச் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்; 10- வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பலர் தேர்ச்சி அடையவில்லை எனவும் அதில் பலர் தேர்வே எழுதவில்லை என்ற விவரம்  தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் எதிரொலியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் 10-வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தற்போது தெரிவித்துள்ளாவது:

தமிழகம் முழுவதும் 10-வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன்  மதிப்பெண்களில் குறைபாடுகள் இருப்பதாக பெற்றோர்கள் , மாணவர்கள் சுட்டிக்காட்டினால்  குழு ஆய்வு மூலம்  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
kavitha

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

1 hour ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

3 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

4 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago