தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொகுதி வாரியாக கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை 18004257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை 18004256669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…