#ElectionBreaking: த.மா.கா.வில் இருந்து விலகுவதாக கோவை தங்கம் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம், சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வால்பாறை சட்டசபை தொகுதியை பெற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தது. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவை தங்கம் இத்தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதிமுக அந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸுக்கு வழங்கவில்லை. வால்பாறை தொகுதியில் அமுல்கந்தசாமி போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. இதில் அதிருப்தி அடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கோவை தங்கம் அறிவித்துள்ளார். வால்பாறை தொகுதியில் கோவை தங்கம் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். வால்பாறை தொகுதியை த.மா.கா.வுக்கு ஒதுக்க அதிமுக மறுத்ததை தொடர்ந்து, அத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

23 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

26 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

50 minutes ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

3 hours ago