#ELECTIONBREAKING: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து, திமுக – மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஒருவாரத்திற்கு மேலாக திமுக -மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரட்டை இலக்கில் தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025