[Image Source : Ken Wolter/Shutterstock]
சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைகிறது சிஸ்கோ (cisco) நிறுவனம். பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோ நிறுவனம் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்க உள்ளது. புதிய தொழிற்சாலையில் ரூ.8,200 கோடி மதிப்புக்கு பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் புதிய அமையவுள்ள சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலைக்கான பணிகள் நடந்து வருவதாகவும் அடுத்த 12 மாதங்களில் முதல் பேட்ஜ் தயாரிப்புகள் வெளியாகும் என இந்தியா வந்துள்ள அந்நிறுவன சிஇஓ தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்க முன்வந்துள்ள சிஸ்கோவின் அறிவிப்புக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆலை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள சிஸ்கோ தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ்க்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும், டாவோஸ் சென்றிருந்த போது தமிழ்நாட்டில் சிஸ்கோ முதலீடு செய்வது குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…