திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதாவது, திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், 5 தொகுதிகள் கேட்கப்பட்டது, திமுகவில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதால் 3 ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையழுத்தானது என்று தெரிவித்துள்ளார்.
எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏணி சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் எந்தந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…