அதிமுக கிளை கழகத்தை கட்டமைக்காவிட்டால் வெற்றி கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை.
விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தலுக்கு 4 ஆண்டுகளும், எம்பி தேர்தலுக்கு 2 ஆண்டுகளும் அவகாசம் உள்ள நிலையில், அதிமுக கிளை கழகத்தை முறையாக கட்டமைக்க வேண்டும்.
அப்படி அதிமுக கிளை கழகங்களை சரியாக கட்டமைக்காவிட்டால் ரூ.50 கோடி செலவழித்தாலும் ஒரு இடம் கூட வெற்றி கிடைக்காது எனவும் எச்சரிக்கை விடுத்தார். பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீண்டிக்க கூடாது என வலியுறுத்தினார். அதிமுக அமைப்பு தேர்தலில் காலியாக உள்ள பதவிகளில் புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிதான் நல்லது செய்வார்கள் என்று நினைத்து மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், எம்எல்ஏ, எம்பி தேர்தலில் மக்கள் ஆளும் கட்சியின் மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…