#BREAKING : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை…! பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

Published by
லீனா

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துரையின் சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 1 கிலோ 130 கிராம் தங்கம், 40 கி.கி வெள்ளி பொருட்கள், வங்கி பாதுகாப்பு பெட்டகங்களின் சாவி, வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் போன்றவையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திரு.P.தங்கமணி (வயது-60) சட்டமன்ற உறுப்பினர், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி என்பவர் தான் முன்பு தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த போது 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.4,85,72,019/- சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் திரு.தங்கமணி, அவரது மகன் திரு.தரணிதரன் மற்றும் அவரது மனைவி திருமதி.சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 8/2021 u/s 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act, 1988 மற்றும் 109 IPC & 12, 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 என்ற பிரிவின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு இடங்களில் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 69 (நாமக்கல் மாவட்டம்-33, சென்னை-14, ஈரோடு-8, சேலம்-4, கோயம்புத்தூர்-2, கரூர்-2, கிருஷ்ணகிரி – 1, வேலூர்-1, திருப்பூர்-1, பெங்களுர் – 2, ஆந்திர மாநிலம் சித்தூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று (15.12.2021) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி சோதனையில் பணம் ரூ.2,37,34,458/-, தங்க நகைகள் 1.130 கிலோகிராம், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,16,37,000/-, சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

31 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago