மயிலாடுதுறையில் வானவெடி தயாரிக்கும் போது வெடி விபத்து.! 4 பேர் உடல் சிதறி பலி.!

Published by
மணிகண்டன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவர் அரசு அனுமதி பெற்று பட்டாசு, வானவேடிக்கை வெடிகளை தயார் செய்து வருகிறார். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன்  ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்றும் அதே போல தில்லையாடியில் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டு இருக்கும் போது, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் வேலையில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர். பயங்கர வெடி சத்தம் கேட்டு அருகாமையில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் உடல்கள் வெடி விபத்தில் பல மீட்டர் தூரத்திற்கு சிதறி இருந்துள்ளளது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. உரிமையாளர் மோகனை தவிர உடல் சிதறி உயிரிழந்த மற்ற நபர்கள் யார் என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் வெளியூரில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago