தமிழகத்தில் 117 எம்.பி.பி.எஸ் மற்றும் 459 பி.டி.எஸ் இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாய்வுக்கான காலக்கெடு முடிவடைந்து விட்டாலும், பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ், 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை சரி செய்யும் விதமாக மருத்துவக் கலந்தாய்வை நடத்த தமிழகத்திற்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் இடங்கள் நிரப்புவதற்காக கலந்தாய்வை மேலும் ஒரு வாரம் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…