குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் கைது.!

Published by
பால முருகன்

நெல்லை மாவட்டம் கடையமான் குளத்தில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி பார்வதி, மேலும் டோன்வூரை சேர்ந்தவர் சாமியார் ராஜன், இந்நிலையில் ராஜன் பார்வதியிடம் உங்கள் வீட்டில் கோடிக் கணக்கான தங்க புதையல்கள் உள்ளது, அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால் சில பூஜைகள் செய்யவேண்டும் என்று பார்வதியிடம் சாமியார் ராஜன் ஆசையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ராஜன் தங்க புதையலை எடுக்க கிட்ட தட்ட 2 லட்சம் பணம் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தங்க புதயலை எடுப்பதற்காக நேற்று இரவு பூஜைக்காக கருப்பு பூனை, மற்றும் கோழி பலி கொடுக்க வேண்டும் என்று பார்வதியின் மகன் குமரேஷன் என்பவரிடம் கூறியுள்ளார்.

மேலும் தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு சாமியார் ராஜன் பேச்சை கேட்டு கருப்பு பூனை மற்றும் கோழியை குமரேஷன் கொடுவந்து சாமியார் ராஜனிடம் ஒப்படைத்துள்ளார், மேலும் பூஜை தொடங்கியதும் அங்கிருந்த கருப்பு பூனை மற்றும் கோழி இரன்டும் தப்பி சென்றுவிட்டது.

இந்நிலையில் இதனால் சாமியார் ராஜன் இதற்கு பதிலாக உனது மூத்தமகன் அல்லது இளைய மகன் இருவரில் யாரையாவது நரபலி கொடுத்துவிடு, அப்போதுதான் அந்த புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளார், அப்பொழுது குமரேஷன் மது போதையில் இருந்துள்ளார்.

மேலும் இதனால் பதற்றமடைந்த குமரேஷன் மனைவி எனது குழந்தைகளை நரபலி கொடுக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார், உடனடியாக சாமியார் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார், இதனால் குமரேஷன் மனைவி வேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு அக்கம் பக்கத்தினருக்கு குரல் கொடுத்துள்ளார்.

அவர் குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு இந்த தகவலை கூறினார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலி சாமியார் ராஜனை கைது செய்தனர். மேலும் பார்வதி குமரேஷன் ஆகிய இரண்டு பேரிடமும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!

எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!

வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…

60 minutes ago

டக்கெட் முன்பு ஆவேசமாக கத்திய முகமது சிராஜ்.! அபராதம் விதித்த ஐசிசி.!

லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…

1 hour ago

மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!

சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…

2 hours ago

சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…

3 hours ago

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி – நடிகர் கமல் உருக்கம்.!

சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…

3 hours ago

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

4 hours ago