விவசாயிகளே..! இன்றே கடைசி நாள் – முந்துங்கள்..!

சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இன்று தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு முறைப்படி நீட்டிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025
“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!
June 20, 2025