தமிழ்நாடு

தனியார் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவருக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சக மாணவர்கள் போராட்டம்…!

Published by
லீனா

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல் சார் பல்கலைக்கழகத்தில் கடலூரை சேர்ந்த பிரசாந்த் என்ற மாணவன் பயின்று வந்தார். இவர் விடுதியில் தங்கி பயின்று வந்த அவர், நேற்று உடற்பயிற்சியின் போது இரத்த வாந்தி எடுத்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதே அவரது உயிரிழப்பு காரணம் என கூறி சகா மாணவர்கள் கல்லூரிக்கு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் புருஷோத்தமன் கடுமையான உடற்பயிற்சி செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அவர் இரத்த வாந்தி எடுத்தும் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினார். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதன்பின் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.  கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்தது. மேலும் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் புருஷோத்தமன் பணி நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

36 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

55 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

4 hours ago