ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடையா.? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை : தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் கூறி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தாலும், மற்ற மாநிலங்களில் ஜூன் 1 வரையில் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் முடிவு வெளியாகவுள்ள ஜூன் 4 வரையில் தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இருந்தும் வாகன சோதனைகள் மட்டும் மாநில எல்லை பகுதிகளில் மட்டும் தொடரும் என்றும் கூறப்பட்டது.

இப்படியான சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறையை கரணம் கூறி, ஊர் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை விதிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ளது. இதனால், சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை சம்பத்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் பழைய மரக்காணம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வருகிற மே 18ஆம் தேதி கோவில் சார்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அப்பகுதி வளத்தி காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கரணம் கூறி மாரியம்மன் கோயில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வளத்தி காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் கூறி ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

மேலும், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்கனவே நடப்பில் உள்ள சட்டத்துக்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலையத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

2 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

3 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

3 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

4 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

4 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

4 hours ago