சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து ஏற்பட்டதில், வீடு எரிந்து நாசமடைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கீழாயூர் காலனியை சேர்ந்த வாகித் என்பவர் வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இன்று காலை விடிந்ததும் பால் பாக்கெட் விநியோகம் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அப்பொழுது அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வீடு முழுவதும் மளமளவென்று பரவியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில், வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டின் அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட பொழுது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…