நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல் செய்பவர்கள் இன்று முதல் தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறுகிறது.இதன் இறுதி தேதி வருகின்ற 30-ஆம் தேதி ஆகும்.
இதற்காக அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,இன்று (22 ஆம் தேதி ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும்,நாளை (23 ஆம் தேதி) காலை 10 முதல் மாலை 3 மணி வரையும், விண்ணப்ப கட்டணத் தொகையான ரூ.25,000 செலுத்தி,விண்ணப்ப படிவங்களை நாளை (23 ஆம் தேதி) 3 மணிக்குள் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அதிமுக தலைமை.மேலும் இதற்கான நேர்காணல் நாளை (23 ஆம் தேதி) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…