விமானம் தாமதம்..! இறந்த சகோதரன் முகத்தை பார்க்க முடியலேயே என அழுத பெண்..!

Published by
murugan

சென்னையிலிருந்து மும்பை செல்லும் கோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன் தினம் காலை 5 மணிக்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 213 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அனைத்து பயணிகளும் நாலு மணிக்குள் விமான நிலையத்திற்கு வந்தனர்.

ஆனால் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அதை சரி செய்து காலை 7 மணிக்கு மும்பைக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் கூறியபடி7மணிக்கு விமானம் புறப்படவில்லை .இதனால்  பயணிகள் மீண்டும் விமான அதிகாரிகளிடம்  கேட்ட போது கண்டிப்பாக 10 மணிக்கு புறப்படும் என அறிவித்தனர்.

இதற்கு பயணிகள் 10 மணிக்கு விமானம் இயந்திர கோளாறை சரி செய்து புறப்படவில்லை என்றால் எங்கள் டிக்கெட்டை ரத்து செய்து விடுகிறார்கள். வேற விமானத்தில் செல்லுகிறோம்என கூறினர். விமான ஊழியர்கள் கண்டிப்பாக புறப்பட்டுவிடும்என தெரிவித்தனர்.

ஆனால் விமானம் மதியம் 1.30 மணி வரை புறப்படவில்லை இதனால் விமானத்தில் இருந்த குழந்தைகள் , பெரியவர்கள் பசியால் வாடினர். விமானத்தின் சட்டப்படி பறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்தில் பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் உட்கார கூடாது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் தாம்பரத்தை சேர்ந்த ஒரு பெண் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். விமான 8 மணி நேரமாக புறப்படாததால் மிகவும் கவலை அடைந்து அழுதுள்ளார். அவரிடம் சக பயணிகள் விசாரித்த போது மும்பையில் தனது சகோதரன் காலமாகிவிட்டார்.

இறுதி சடங்கில் கலந்துகொள்ள இந்த விமானத்தில் ஏறினேன். பல மணி நேரம் ஆகியும் விமானம் புறப்படவில்லை எனது சகோதரன் முகத்தை கடைசியாக  கூட பார்க்க முடியாமல் இவர்கள் செய்து விட்டார்களே என கதறி அழுதார். இதைக் கேட்ட சக பயணிகள் கண் கலங்கினார். பின்னர் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.

Published by
murugan
Tags: Flight delay

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago