Heavy Rain in Chennai Airport [File Image]
கனமழை: சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் நேற்று நள்ளிரவு தலைநகர் சென்னையில் உட்பகுதி மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மழைநீர் தேங்கும் நிலை உருவானது. வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன.
நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக இன்று துபாய், டெல்லி, புனே செல்லும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக விமானங்கள் தாமதமாக செல்லும் நிலை உருவானது.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லி பகுதியில் 10.4 செமீ அளவுக்கு மழை பெய்தது எனவும், சோழிங்கநல்லூர் பகுதியில் 8.2 செமீ மழை பெய்தது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…