Heavy Rain in Chennai Airport [File Image]
கனமழை: சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் நேற்று நள்ளிரவு தலைநகர் சென்னையில் உட்பகுதி மற்றும் புறநகர் என பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மழைநீர் தேங்கும் நிலை உருவானது. வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன.
நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக இன்று துபாய், டெல்லி, புனே செல்லும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக விமானங்கள் தாமதமாக செல்லும் நிலை உருவானது.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லி பகுதியில் 10.4 செமீ அளவுக்கு மழை பெய்தது எனவும், சோழிங்கநல்லூர் பகுதியில் 8.2 செமீ மழை பெய்தது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…