முதல் முறையாக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலான கடந்த அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்று,பின்னர் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,கடந்த 22 ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி ,ஊராட்சி ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து,இதில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில்,கடந்த 22 ஆம் தேதி நடைபெறவிருந்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் அதிகாரிகள் செய்த சிறிய குளறுபடிகள் காரணமாக அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தள்ளிவைக்கப்பட்ட நிலையில்,இன்று மறைமுக தேர்தல் போலீசார் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.இதுவரை அதிமுக மட்டுமே நெமிலி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று வந்த நிலையில்,தற்போது முதல் முறையாக திமுக வென்றுள்ளது.
திமுகவை சேர்ந்த வடிவேலு நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…