தென்காசி மாவட்டம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ நைனா முகம்மது மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.
தென்காசியில் கடையநல்லூர் தொகுதியில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார் நயினா முகமது. பின்னர்ட் 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, 17 ஆண்டுகள் அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை நயினா முகமது வகித்து வந்தார்.
தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற அதிமுக அரசு ஆதரவு அளித்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன்பின் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…