நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 60 மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.
அதன்பின் எஸ்.பி.வேலுமணி, நள்ளிரவில் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு சென்று, ஈபிஎஸ் மற்றும் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மற்றும் விசாரணை குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இன்று அதிமுகவின் உயர்மட்டகுழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…