சென்னை:நாளை (ஏப்ரல் 1-ஆம் தேதி) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது.இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது.
இ-கவர்னன்ஸ் திட்டம்:
இதனை கருத்தில் கொண்டு இந்தச் செலவைக் குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்களை அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இந்தத் திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன.
நாளை முதல்:
இந்த நிலையில்,நாளை (ஏப்ரல் 1-ஆம் தேதி) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.அதாவது காகிதங்களை அகற்றி கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்தபட உள்ளது.
பயிற்சி:
அதன்படி,சென்னை தலைமைச் செயலகத்தில் முதற்கட்டமாக சில துறைகளையும் பின்னர் அனைத்து துறைகளும் மின்னணுமயமாக்கப்பட உள்ளன.இதற்காக போதுமான பயிற்சிகள் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தகவல் கூறப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…