அதிமுக ஆட்சி ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுகவின் ஊழல் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும் என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு.

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். அதிமுகவின் ஊழல் ஆட்சியை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும், கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை எனவும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக, சென்னையில் கடந்த 24ம் தேதி TANGEDCO அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.  இதில், டிஜிட்டல் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், அதிமுக ஆட்சி ஊழல் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என முதல்வர் தெரிவித்தார்.

இதனிடையே, பேசிய முதல்வர், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என பா.ஜ.க.வினர் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் தான். அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம், இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என நம்புகிறோம் எனவும் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

55 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago