காந்தி ஜெயந்தியன்று காலமான கிராமத்து காந்தி தாத்தா! சோகத்தில் கிராமமக்கள்!

Published by
லீனா

இன்று நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த குருசாமி (89) எனும் சுதந்திர போராட்ட வீரர் இன்று காலமானார்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக இரவு 12:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற நிலையில், காந்தி மீது கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதனால் மக்கள் அவரை ‘காந்தி தாத்தா’ என்றே அன்போடு அழைத்து வந்தனர். இந்த கிராமத்து காந்தி தாத்தா, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தேசப்பற்றை விதைக்க பாடுபட்டவர்.

இந்நிலையில், இவரது மறைவு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

1 hour ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

4 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

4 hours ago