இன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் அனுசரிக்கப்படும் நிலையில், சென்னை மெரினாவில் உள்ள காந்தியின் சிலைக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இன்று தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது உருவப்படமும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார், மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், அகிம்சை – சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள். தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும். சகோதரத்துவத்தை வளர்ப்போம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…