தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கும் , 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியில் இருக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய அரசு கடந்த 24 -ம் தேதி ஊரடங்கு பிறப்பித்தது.இதையெடுத்து ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.
சமீபத்தில், மத்திய அரசு சில தொழிற்சாலைகளுக்கு இயங்க விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகள் அனுமதிப்பது தொடர்பாகவும், கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர், சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், போன்றவை தொடர்ந்து இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 33% ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணியில் இருக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…