அரசு மதுபானக்கடை ஊழியரை தாக்கிவிட்டு 5 லட்சம் வழிப்பறி செய்து சென்ற மர்ம நபர்கள்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தும்பை பெட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு பாண்டி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு 5 லட்சம் பணத்துடன் அதை வங்கியில் செலுத்துவதற்காக தனது சகோதரன் கண்ணனுடன் சத்தியபுரம் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரண்டு மர்ம நபர்கள் பாண்டி மற்றும் கண்ணனை தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 5 லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த வழிப்பறி சம்பவம் குறித்து பாண்டி அளித்த புகாரின் பேரில் மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…