விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் மக்களுக்காக அரசு பல தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விளையாட்டு மைதானங்களில் ஆரம்பத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. விளையாட்டு மைதானங்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்ப தடை விதிக்கப்படவேண்டும், மைதானங்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படவேண்டும்.
தண்ணீர் பாட்டில்கள் அவரவர் கொண்டுவரவேண்டும் மைதானத்தில் உள்ள கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு மைதானம் வளாகத்திற்குள் துரித உணவுகள் தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்ய தடை. மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும்பொழுது மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…