விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் மக்களுக்காக அரசு பல தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விளையாட்டு மைதானங்களில் ஆரம்பத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. விளையாட்டு மைதானங்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்ப தடை விதிக்கப்படவேண்டும், மைதானங்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படவேண்டும்.
தண்ணீர் பாட்டில்கள் அவரவர் கொண்டுவரவேண்டும் மைதானத்தில் உள்ள கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு மைதானம் வளாகத்திற்குள் துரித உணவுகள் தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்ய தடை. மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும்பொழுது மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…