சென்னை மண்டலத்தில் 15 நியாய விலைக்கடைகளில் ஊழியர்கள் கையாடல் செய்தது தொடர்பாக 15 கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில், பொது விநோயாக திட்டத்தில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படியே குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை (நகரம்) வடக்கு/தெற்கு சரகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பண்டங்கள் பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை பதிவுகள் மூலம் டிசம்பர் 2021 மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் அத்தியாவசியப் பொருட்களை கீழ்க்கண்ட நியாய விலைக்கடைப் பணியாளரால் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பது இவ்வலுவலக காப்பணியாளர்கள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு
மேற்கண்ட நியாய வியைக் கடைகளில் 100% பயோமெட்ரிக் முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்களமல் ப்ராக்ஸி முறை அமையும் விதமாக பட்டியலியப்பட்டு, அரசின் மான்ய பொருட்களை கையாடல் செய்யப்பட்டது உறுதி. செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்காணும் நியாய விலைக் கடைப் பணியாளர்களின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இத்தவறுகள் ஏற்படாவண்ணம் நியாய விலைக் கடைகளை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…