மதுக்கடைகள் தற்போது செயல்படும் 9 மணி நேரத்திற்கு பதில் 4 மணி நேரம் குறைக்க அரசு திட்டம்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப்பரவலைக் கருத்தில் கொண்டு நாளை முதல் காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் கடைகள் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மதுக்கடைகளுக்கு மட்டும் ஏன்..? எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திறந்துள்ளனர். தற்போதைய நேரத்திற்கு பதில் இனி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டம்.
தற்போது செயல்படும் 9 மணி நேரத்திற்கு பதில் 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் கடையை வைத்து வந்திருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…