Durai vaiko [Imagesource : Representative]
சேலத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தமிழக அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஆளுநரின் செயல்பாடு உள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.
மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும்…பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்!
சங்கரய்யா ஒரு விடுதலை போராட்ட வீரர். அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. எனவே இவர் தேசப்பற்று, நாட்டுப்பற்று பற்றி பேச இவருக்கு அருகதை கிடையாது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட ஒரு ஆளுநராக செயல்படக்கூடிய தகுதி அவருக்கு கிடையாது என தெரிவித்துளளார்.
மேலும், பாடப்புத்தகத்தில் ராமாயணம், மகாபாரதத்தை கொண்டு வந்தால், பைபிளையும், குரானையும் கொண்டு வர வேண்டும். பாஜக மதத்தை வைத்து அரசியலை செய்ய நினைக்கிறார்கள். மதத்தை, ஜாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்களிடம் என்றைக்கு மாற்றம் வருகிறதோ, அன்றைக்கு தான் அரசியலில் மாற்றம் ஏற்படும்.
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…