Venkatesan MP Tweet [File Image]
ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை என சு.வெங்கடேசன் எம்பி கருத்து.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மதுரை எம்பி, ஜனநாயக சக்திகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை தன் முடிவை திரும்ப பெறுகிறார் ஆளுநர். ஒரு அறிவிப்பின் மூலம் அமைச்சரை நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு சு.வெங்கடேசன் எம்பி டிவிட்டர் பதிவில், ஆளுநரை நீக்க இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ, அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள். மேலும், அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர், அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு எனவும் கூறியிருந்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…