#BREAKING: டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

Published by
murugan

டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது போன்ற  கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் எனவும் இரவு 9 மணிக்கே மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அன்று டாஸ்மாக் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எந்த ஒரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.
  • இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • ஒரே நேரத்தில் கடையில் உள்ள ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • கடை பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி, முகக் கவசம், கையுறை மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
  • கடையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் கடை பணியாளர்கள் வேலை நேரத்தில் கிருமி நாசினி திரவத்தை குறைந்தது ஐந்து தடவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நாசினி திரவத்தை கொண்டு கடை சுத்தம் செய்வதுடன் கடையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் முன்புறம் நின்று மதுப்பிரியர்களை  சமூக இடைவெளி பின்பற்ற வரச்செய்தும், முகக்கவசம் அணிந்து வரச்செய்தும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.
  • கடை பணியாளர்கள் மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்காமலும் ,கடையில் அதிக கூட்டம் சேராமலும், பொது இடங்களில் மது அருந்துவதை தடை செய்தும் பணி புரிதல் வேண்டும்.
  • முகக் கவசத்தை அணிந்து வரும் மதுபிரியர்களுக்கு மட்டும் மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும்.
  • குறைந்தது 50 வட்டங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது பொருட்டு கடையில் எதிரே வரையபட்டிருக்க வேண்டும்.
  • விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும்.
  • 21 வயது நிரம்ப பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்தல் கூடாது.
  • எக்காரணம் கொண்டும் மதுபானங்கள் மொத்த விற்பனை செய்தல் கூடாது.

Published by
murugan
Tags: #Tasmac

Recent Posts

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

29 minutes ago

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

10 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

12 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

12 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

13 hours ago