டாஸ்மாக் மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருமலைக்கூடலில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கியதாக 10 பெண்கள் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயக்குமார் என்பவர் வழக்குகள் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டாஸ்மாக் போராட்டக்காரர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்தைப் பெருக்க மதுக்கடைகளை அரசு அமைந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்க உரிமை உண்டு என தெரிவித்தார்.
மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 95-ன் கீழ் விதிவிலக்கு அளித்து 10 பெண்கள் உட்பட சிலர் மீது தொடரப்பட்ட மீதான வழக்கை ரத்து செய்தார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…