“17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவு”- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!

Published by
Edison
  • தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் உருக்காலை வளாகத்தில் மேலும் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

  • “தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது,புதிதாக தொற்று பரவாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
  • இருப்பினும்,தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக,தற்போது 17 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
  • ஆனால்,11 மாவட்டங்களில் இன்னும் தொற்றின் தாக்கம் குறையவில்லை. எனவே,தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் மக்கள் கவனக் குறைவாக இருக்க கூடாது.கொரோனா அறிகுறிகள் வந்தவுடனே உடனடியாக உரிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.அவ்வாறு,செய்தால் 10 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைய முடியும்.
  • தமிழகத்தில் அடுத்த அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை  முதல்வர் அமைத்துள்ளார்.இந்தக் குழுவானது கொரோனா பரவல் குறித்து கண்காணித்து வருகிறது.
  • மேலும்,கொரோனா மற்றும் கொரோனா அல்லாத இறப்பு நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
  • மே மாதம் முதல்,இரண்டாவது வாரத்தில் பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி,தற்போது நாள் ஒன்றுக்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது”,என்று தெரிவித்தார்.

 

Published by
Edison

Recent Posts

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

13 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

38 minutes ago

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

7 hours ago

சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…

8 hours ago

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

10 hours ago