சென்னையில் ஒரு மணி நேரமாக கனமழை..!இன்று ,நாளை மழை தொடரும் ..!

வானிலை ஆய்வு மண்டல மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ராமாபுரம் ,பேரூர் ,வளசரவாக்கம் ,விருகம்பாக்கம் பள்ளிக்கரணை ,அயனாவரம் , பெசன்ட்நகர் ,வியாசர்பாடி ,நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கோடம்பாக்கம் , கே .கே நகர் , அண்ணாநகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம் ,குரோம்பேட்டை ,தாம்பரம் , பெருங்களத்தூர் ,வண்டலூர் ,கிண்டிஆதம்பாக்கம் ,சூளைமேடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்னும் சில மணி நேரத்திற்கு கனமழை மற்றும் லேசான மழை விட்டு விட்டு பெய்துவரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.சாலைகளில் ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
June 29, 2025
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025